* “ஆற்றுப்படுத்தும் அரங்காக கூத்து” -யாழினி யோகேஸ்வரன்
ஈழத்து தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளில்
ஒன்றான கூத்து ஈழத்துத்தமிழர் மத்தியில்
மகிழ்வுடனும், அழகியலுடனும்
பயிலப்பட்டு வருகின்றது.
ஈழத்துத் தமிழர் எங்கெல்லாம் செறிந்து
வாழ்கின்றார்களோ அவ்வாறான பிரதேசங்களில்
எல்லாம் அவர்களுக்கான பாரம்பரியக் கூத்த
வடிவங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பின்னணியில் பாரம்பரியத்
தொடர்ச்சிமிக்க வன்னிப் பெருநிலப்பரப்பிலே
ஏற்பட்ட யுத்தப் பேரழிவு, இடப்பெயர்வு அதன்
பின்னரான முகாம் வாழ்வுச் சூழலிலும்
அம்மக்கள் தமது பாரம்பரியக் கூத்துக்களை
முன்னெடுத்துள்ளனர்தமது பண்பாட்டுத் தளத்தில்
நின்று சடங்குக்குரியதாகவும்
மகிழ்வூட்டலுக்குரியதாகவும் கருத்திலெடுக்கப்படும்
கலைச் செயற்பாடொன்று தமது வாழ்வின்
இருப்புப் பெயர்க்கப்பட்டு இடப்பெயர்வு
திணிக்கப்பட்டதான முற்றிலும் புறம்பான முகாம்
வாழ்வுச் சூழலில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாரம்பரியமாக தத்தம் பண்பாட்டு தளத்தில் நின்று
(சூழல்,கருத்தியல்,நம்பிக்கை,மரபு அல்லது தொடர்ச்சி) முன்னெடுக்கப்பட்டிடும் அல்லது வாழ்வியல்
நடைமுறைகளில் ஒன்றாகக் கொள்ளப்படும்
கூத்துக்கள், மேற்படி அடித்தளமே தகர்க்கப்பட்ட,
பழக்கமற்ற,சவால்கள் சூழ்ந்த வாழ்க்கைமுறையினுள் திணிக்கப்படுகையிலும்கூட முன்னெடுக்கப்படவேண்டியதன்
அவசியம் என்ன?
என்பதை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வுக்
கட்டுரை முன் வைக்கப்படுகின்றது.
வன்னிப் பிரதேசத்தில் கூத்து ..........
.http://eathuvarai.net/?p=2586
No comments:
Post a Comment